இந்தியா
தொடர் விடுமுறை எதிரொலி.. பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

தொடர் விடுமுறை எதிரொலி.. பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை வரவுள்ளதால் விமானங்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை- மதுரை இடையே வழக்கமாக 4,300 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 17,695 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கான கட்டணம் 14,387 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 9,418 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சென்னை – கொச்சி இடையிலான விமான கட்டணம் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னை- தாய்லாந்து இடையே வழக்கமாக 8,891 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 17,437 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கட்டணம் அதிகரித்தாலும், பல விமானங்களில் டிக்கெட்கள் முழுமையாக முன்பதிவாகியுள்ளன.