Connect with us

இந்தியா

மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கிய மன்னர்

Published

on

Modi Kuwait 1

Loading

மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கிய மன்னர்

PM Modi Kuwait Visit, PM Modi receives Mubarak Al Kabeer:  ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ என்பது குவைத் நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இறையாண்மை மிக்க தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படும் குவைத் உயரிய விருது ஆகும்.ஆங்கிலத்தில் படிக்க: PM Modi awarded Kuwait’s highest honour, the Order of Mubarak Al Kabeerபிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். மோடிக்கு வழங்கப்படும் 20-வது சர்வதேச கவுரவம் இது.குவைத் நாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி தனது 2 நாள் குவைத் பயணமாக, இந்திய தொழிலாளர் முகாமுக்கு சனிக்கிழமை வருகை தந்தார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவால் அழைக்கப்பட்ட பிரதமர் மோடி, மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் சபா அல்-கலித் அல்-சபா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது, இதற்கு முன்னர், பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன