Connect with us

இந்தியா

ரயில்வே திட்டங்களின் கால தாமதத்திற்கு தமிழக அரசு காரணம்.. மத்திய அரசு விளக்கம்!

Published

on

ரயில்வே திட்டங்களின் கால தாமதத்திற்கு தமிழக அரசு காரணம்.. மத்திய அரசு விளக்கம்!

Loading

ரயில்வே திட்டங்களின் கால தாமதத்திற்கு தமிழக அரசு காரணம்.. மத்திய அரசு விளக்கம்!

Advertisement

ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 587 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டம் உள்பட 22 ரயில்வே திட்டங்கள், பல்வேறு நிலைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 665 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-14 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 879 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டு 7 மடங்குக்கு அதிகமாக 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிலத்தில் 74 சதவீதம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.  தமிழ்நாடு அரசின் ஆதரவைப் பொறுத்தே நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காலதாமதமின்றி செயல்படுத்த முடியும் என்றும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன