Connect with us

சினிமா

‘என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது’ – அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டு

Published

on

‘என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது’ – அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டு

Loading

‘என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது’ – அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டு

தவறான தகவல்களை பரப்பி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதாக நடிகர் அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

Advertisement

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம்தேதி தேதி வெளியிடப்பட்டது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு தெலங்கானா அரசு அனுமதி அளித்திருந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை மீறி அல்லு அர்ஜுன் சிறப்புக் காட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பிய நிலையில், அவரை தெலுங்கு திரையுலகத்தினர் அனைவரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்தை அல்லு அர்ஜுன் வழங்கினாலும், விபத்து நடந்ததற்கு அவர்தான் காரணம் என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement

இந்நிலையில் தெலங்கானா சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை மஜ்லிஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அக்பருதீன் ஒவைசை எழுப்பினார். இதற்கு  பதிலளித்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜுன் வரக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி அவர் சென்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.

அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்று கொண்டு அவர் கையசைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்த அல்லு அர்ஜுன் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்? என்று சரமாரியாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது-

Advertisement

நடக்கக் கூடாத சம்பவம் நடந்துவிட்டது. அது ஒரு விபத்து. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் உடல் நிலைமை குறித்து ஒவ்வொரு மணிக்கும் ஒருமுறை நான் அப்டேட்டுகளை கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. என்னைப்பற்றி ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அதிகாரிகளையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனது நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன