Connect with us

விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?

Published

on

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?

Loading

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், இந்தியா முதல்முறையாக 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கியவர், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். இந்த நிலையில் தான், ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தப்பா பெங்களூரைச் சேர்ந்த சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இது ஒரு ஆடை நிறுவனம். இந்நிலையில், அந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் வசூலித்த சுமார் ரூ.24 லட்சம் ரூபாயை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உத்தப்பாவின் நிறுவனம் ரூ.24 லட்சத்தை பிடித்துள்ளது. எனினும், அந்த தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதுதொடர்பான புகாரில் தான் தற்போது உத்தப்பாவுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பாவுக்கு கடந்த 4 ஆம் தேதி பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பா துபாயில் உள்ள நிலையில், அவர் 27 ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செலுத்தாத பட்சத்தில் உத்தப்பா கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன