Connect with us

இலங்கை

திருடர்களிடம் பிடியில் உள்ள பகுதி… அதிகாரிகளுக்கு ஆளுநர் விடுத்த அதிரடி பணிப்புரை!

Published

on

Loading

திருடர்களிடம் பிடியில் உள்ள பகுதி… அதிகாரிகளுக்கு ஆளுநர் விடுத்த அதிரடி பணிப்புரை!

திருடர்களின் பிடியில் உள்ளதாக கூறப்படும் சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மாலம்பே முதல் அம்பத்தளை வரையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உத்தரவு பிறக்க்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இதுதொடர்பில் இன்றையதினம் (23-12-2024) பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் திருடர்களால் கொள்ளையடிப்பதாக அப்பகுதி மக்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே ஆளுநர் ஹனீப் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இதன்படி, மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும், வீதியின் நுழைவாயிலின் இருபுறங்களும் பாதுகாப்பை அதிகரிக்கவும் ஆளுநருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன