Connect with us

இலங்கை

பண்டிகை கால பட்டாசு வியாபாரம் வீழ்ச்சி!

Published

on

Loading

பண்டிகை கால பட்டாசு வியாபாரம் வீழ்ச்சி!

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருள்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதமானவை விற்பனை செய்யப்படாமல் எஞ்சியுள்ள நிலையில் 

அதனை  நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பின் போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் அனுமதிப்பத்திரம் பெறாமலும் சில தரமற்ற பட்டாசுகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

மேலும்  உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை, அவற்றுக்கான உற்பத்தி செலவுகளையேனும், மீளப்பெறுவதற்கு அவற்றைக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை சில உற்பத்தியாளர்கள் முன்னெடுத்துவருவதாகவும்  பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன