Connect with us

இலங்கை

பலாலி இராணுவ முகாமில்  திடீரென உயிரிழந்த இராணுவ வீரர்!

Published

on

Loading

பலாலி இராணுவ முகாமில்  திடீரென உயிரிழந்த இராணுவ வீரர்!

பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

நேற்றையதினம் (22) காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன்போது பலாலி இராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன