Connect with us

இந்தியா

“மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு!

Published

on

"மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தம்" - அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு!

Loading

“மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு!

Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் பள்ளிக் கல்வித்துறைக்கு அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அன்பில் மகேஸ், “கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நம் மாணவர்கள் எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய முடியும். நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் தொடர்ச்சியாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றது. அந்த 29 பைசா வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்” என்று கூறி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட பதிவில், “இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன