இலங்கை
எம் ஜி.இராமச்சந்திரனின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிப்பு!

எம் ஜி.இராமச்சந்திரனின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிப்பு!
தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான எம்.ஜி.இராமச்சந்திரனின் 37ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவுத் தூபியில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை எம்.ஜி.ஆர் நற்பணிமன்றத்தின் தலைவர் தில்லையம்பலம் ஜெயராஜின் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுக்கு சக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.