இலங்கை
பிரதேசசபை ஊழியர்களுக்கு : எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

பிரதேசசபை ஊழியர்களுக்கு : எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து
வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி ஏற்றப்பட்டது.
இதன் போது பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றதுடன் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசியும் ஏற்றப்பட்டது.
இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி நடாத்தி மருத்துவருடன் பொது சுகாதார பரிசோதகரும் இணைந்திருந்தார்.