Connect with us

இலங்கை

மின் கட்டணத்தைக் குறைக்க அரசாங்கமே முழுத்தடை- நளின் பண்டார!

Published

on

Loading

மின் கட்டணத்தைக் குறைக்க அரசாங்கமே முழுத்தடை- நளின் பண்டார!

மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டாம் என்று அரசாங்கமே மின்சாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் தெரிவித்ததாவது;
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும் மின்சாரசபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன. மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டாம் என்று அரசாங்கமே மின்சாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. மின் கட்டணத்தை உடனடியாகக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மக்களைத் துன்பப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகின்றனர் – என்றார். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன