Connect with us

இலங்கை

யாழ். நகர வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை!

Published

on

Loading

யாழ். நகர வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாண பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

உணவகங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக 28 வர்த்தக நிலையங்களில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் 11 கடைகளில் குறைபாடுகள் இருப்பது அவதானிக்கப்பட்டதுடன் குறித்த வர்த்தக நிலையங்களில் வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த 9 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும் நான்கு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பேரில், சுகாதார மருத்துவ அதிகாரி, தொற்றுநோய் தடுப்பு மருத்துவ அதிகாரி, தாய்சேய் நல மருத்துவ அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த களத்தரிசிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன