Connect with us

சினிமா

அருணை தெய்வமாக்கிய ராஜனின் அப்பா.. வன்மத்தால் அசிங்கப்பட்ட சவுண்ட்..

Published

on

Loading

அருணை தெய்வமாக்கிய ராஜனின் அப்பா.. வன்மத்தால் அசிங்கப்பட்ட சவுண்ட்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் பிக்பாஸ் பார்க்கும் பார்வையாளர்களும் உற்சாகமாக காணப்படுகின்றார்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே நிறைவுக்கு வரவுள்ளது. இதில் கடுமையான போட்டியாளர்களாக முத்துக்குமரன், தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தீபத்தின் குடும்பத்தினர், மஞ்சரி குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருந்ததோடு அதில் தீபக்கின் மனைவி சக போட்டியாளர்கள் போலே நடித்துக் காட்டிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் ராஜன் குடும்பத்தினர் வருகின்றார்கள். அதில் அவருடைய குடும்பத்தினரிடம் சக போட்டியாளர்கள் பற்றிய கருத்துக்களை கேட்டுள்ளார் பிக்பாஸ்.இதன்போது ராஜனுடைய அப்பா கரடி மாஸ்டர் என்பதால் போட்டியாளர்களுக்கு கராட்டி கற்றுக் கொடுத்ததோடு ராஜன் விழுந்த நேரத்தில் சௌந்தர்யா அவன் நடிக்கிறார் என்று சொன்னதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மேலும் அந்த நேரத்தில் அருண்தான் தெய்வமாக காணப்பட்டதாகவும் அவரை தெய்வம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன