Connect with us

இலங்கை

அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி!

Published

on

Loading

அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி!

அரசாங்க அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தர்க்கரீதியற்ற அடிப்படையில் திட்டமிட்டு வேலை இடமாற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.. 

 அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

இதனால் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி செயலாளர்கள், கூட்டுறவு உதவி அபிவிருத்தி ஆணையாளர் போன்ற ஊழியர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அரச சேவையின் சுதந்திரத்தை ஸ்தாபிப்பதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பிரச்சினைக்குரியது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இன்னும் முடிவடையாத, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், நடைபெற்று வரும் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆகியவற்றால், இதுவரை இல்லாத வகையில், அரச சேவையில் விரைவான அரசியல்மயமாதல் நடைபெறுவதாக அக்கட்சி கூறுகிறது. 

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பிரிவொன்றையும் அமைத்துள்ளதாகவும் கூறுகிறது. 

  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன