Connect with us

இலங்கை

எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு!

Published

on

Loading

எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு!

ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதிக்கும் பதுஓயாவிற்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் எரிந்த வண்டியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர் கெப் ஒன்று தீப்பிடித்து எரிவதாக அறிவித்ததையடுத்து மின்னேரிய பொலிஸார் எரிந்துகொண்டிருந்த கெப் வண்டியை மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

நேற்று (25) இரவு 10 மணியளவில் தீ பரவியதாகவும், அப்போது கெப் வண்டி ஹபரனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாகவும், அதில் வேறு யாரும் இருக்கவில்லை என்றும் மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நபர் ஒருவரைக் கொன்று அவரது சடலத்தை வண்டியில் ஏற்றி, கெப் வண்டியை இந்த பகுதிக்கு கொண்டு வந்து எரித்து பின்னர் தீ வைத்து எரித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.

மின்னேரியா பொலிஸாரும் பொலன்னறுவை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் வந்து பெரும் முயற்சியில் தீயை முழுமையாக அணைத்தனர். தீப்பிடித்த கெப் வண்டி கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன