Connect with us

இலங்கை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 383 சாரதிகள் அதிரடி கைது!

Published

on

Loading

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 383 சாரதிகள் அதிரடி கைது!

இன்று (28) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கையில், பண்டிகைக் காலத்தில் வாகன விபத்துக்களை குறைப்பதற்கான நாடளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, மதுபோதையில் வாகனம் செலுத்திய 383 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த காலப்பகுதியில் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மொத்தம் 8,392 சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

இதில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,382 சாரதிகள் மீதும், உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக 690 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் செலுத்தியதற்காக 98 பேர் மீதும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 59 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன