இலங்கை
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்திய மர்ம கும்பல்! பரபரப்பு சம்பவம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்திய மர்ம கும்பல்! பரபரப்பு சம்பவம்
நீர்கொழும்பு – சீதுவ, வெலபட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (28-12-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரில் சென்ற மர்ம நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.