இலங்கை
கொழும்பை வந்தடைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல்!

கொழும்பை வந்தடைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல்!
இந்தோனேஷிய நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா – 367’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் சனிக்கிழமை (28-12-2024) உத்தியோகபூர்வ விஜயமாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் இந்தோனேஷிய கடற்படையின் சிக்மா – கோர்வேட் ரகத்தைச் சேர்ந்ததாகும்.
நேற்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.
120 பணியாட்களைக் கொண்ட இந்தக் கப்பல் 9071 மீற்றர் நீளமுடையதாகும்.
இக்கப்பல் நாட்டிலிருக்கும் காலத்தில் நாட்டின் முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ளதோடு, இந்தோனேக்ஷியாவிற்கு புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.