Connect with us

இலங்கை

சீன மருத்துவமனை கப்பலுக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

Published

on

Loading

சீன மருத்துவமனை கப்பலுக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சீன மருத்துவமனை இலங்கை மக்களுக்கு கப்பல் மூலம் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்குவதை பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார்.

சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

Advertisement

குறித்த கப்பல் இலங்கை மக்களுக்கு வழங்கும் இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை சேவைகள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சீன அரசாங்கத்தின் Mission Harmony – 2024 (மிஷன் ஹார்மனி – 2024) திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை வந்த இந்த மருத்துவமனை கப்பல், கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

இன்று (27) வரை நாட்டில் தங்கியிருக்கும் இக்கப்பல் நாட்டு மக்களுக்கும் இந்நாட்டில் தங்கியுள்ள சீன மக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கவுள்ளது.

Advertisement

இந்த வைத்தியசாலை கப்பலின் ஊடாக இலங்கை மற்றும் ஏனைய உலக மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை நேரில் சென்று பார்வையிட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிடுகையில்,

“இலங்கை – சீனா இருதரப்பு உறவுகளை இலங்கையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் மேலும் பலப்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் சுகாதாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக விவகாரங்களை மேம்படுத்துவதற்காக சீனக் குடியரசு நீண்டகாலமாக தலையீடு செய்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை கப்பலில் ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பரிசோதனைகள் மட்டுமின்றி, சீன அக்குபஞ்சர் உள்ளிட்ட சீன ஆயுர்வேத மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த கப்பலில் அறுவை சிகிச்சை அரங்குகள் , தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விசேட மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement

மேலும் சீன மக்கள் குடியரசால் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் 2008 முதல் மருத்துவ உதவி வழங்க பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong , முப்படைகளின் தளபதிகள். , பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன