Connect with us

இந்தியா

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு; ஜனவரி 1-ல் அமல்: அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்

Published

on

Puducherry Govt Competitive Examination: Free Coaching Course Tamil News

Loading

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு; ஜனவரி 1-ல் அமல்: அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) வரும் ஜனவரி 1ந் தேதி முதல் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர்கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி  பெட்ரோல் வரி 2.44 சதவீதமும், டீசல் 2.57 சதவீதமும்  உயர்கிறது. இந்த உயர்வு புதுச்சேரி, காரைக்கால்,  மாகி,ஏனாம் என 4 பிரதேசங்களிலும் அமலாகிறது.தற்போது, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் ரூ.94.03, மாகியில் ரூ.91.92, ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ.84.35, மாகேவி ரூ.81.90, ஏனாமில் ரூ.84.75 ஆக உள்ளது. வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புதுச்சேரி அரசின் வருவாயை உயர்த்தும் நோக்கில் இந்த வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களை விட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே  இருக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன