இலங்கை
பெரஹரா ஊர்வலத்தில் யானையால் ஏற்பட்ட குழப்பநிலை! ஒருவர் வைத்தியசாலையில்

பெரஹரா ஊர்வலத்தில் யானையால் ஏற்பட்ட குழப்பநிலை! ஒருவர் வைத்தியசாலையில்
காலி, தொடந்துவ மொரகொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (28-12-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெரஹரா ஊர்வலத்தின் போது யானை நபரொருவரை தாக்கியுள்ளதாகவும் அதனால் அங்கு பெரும் குழப்ப நிலை நிலவியதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.