இலங்கை
யாழ்ப்பாணத்தின் மூத்த படைப்பாளர் காலமானார்!

யாழ்ப்பாணத்தின் மூத்த படைப்பாளர் காலமானார்!
60 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.வடமராட்சி, கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட 80 வயதான யோகேந்திரநாதன் இன்றையதினம் (29-12-2024) நீர்வேலியில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960 களில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்த அவர் தன் வாழ்நாளின் கடைசி வரை எழுத்துலகில் பிரகாசித்தார்.