இலங்கை
குளவிக் கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள்!
குளவிக் கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள்!
அக்கரப்பத்தனை – பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் சனிக்கிழமை (28) பகல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் எட்டு பெண்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அக்கரப்பத்தனை – மன்ராசி பிரதேச மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுளனர்.
பாரிய மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடொன்று கலைந்ததில்இ அதிலிருந்த குளவிகள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை தாக்கியுள்ளன. மன்ராசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு பேரில் நால்வர் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
