Connect with us

இலங்கை

சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மானிய வட்டியில் கடன் வழங்க திட்டம்!

Published

on

Loading

சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மானிய வட்டியில் கடன் வழங்க திட்டம்!

சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 நெல் அறுவடைக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

 கடந்த பருவங்களில் இத்திட்டம் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது  அவதானிக்கப்பட்டதால், 2024/25 பருவத்தில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவது விரும்பத்தக்கது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி, குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு அதிகபட்ச தினசரி 25 மெட்ரிக் டன் அரிசி அரைக்கும் திறன் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இந்த சலுகை கடன் முறை பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. 

 இதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால், அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா வரையிலான ஒடபான கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன