Connect with us

இலங்கை

தமிழர் பகுதிகளில் கரையொதுங்கிய 2 படகுகள்… மியான்மார் அகதிகள் படகுகளா?

Published

on

Loading

தமிழர் பகுதிகளில் கரையொதுங்கிய 2 படகுகள்… மியான்மார் அகதிகள் படகுகளா?

மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் 2 படகுகள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இன்றையதினம் (31-12-2024) காலை கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முல்லைத்தீவில் மியன்மார் நாட்டு அகதிகளுடன் படகு ஒன்று கரையொதுங்கியிருந்தது.

Advertisement

குறித்த படகுடன் பயணித்த மேலும் 2 படகுகள் சேதமடைந்தமையால் கடலில் கைவிடப்பட்டன என்று உயிர் தப்பிய மியன்மார் அகதிகள் தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு பழுதடைந்தபோது கைவிடப்பட்ட 2 படகுகள் எனக் கருதப்படும் படகுகள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆள்கள் எவரும் இன்றி இன்று கரையொதுகியுள்ளன.

கரையொதுங்கிய படகுகள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் 2 படகுகளும் மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள்தானா அல்லது வேறு படகுகளா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன