Connect with us

உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாட்டம்!

Published

on

Loading

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாட்டம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 31/12/2024 | Edited on 31/12/2024

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும்  டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்திலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் 2024ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

அதனையொட்டி அங்குள்ள மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் எனப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இன்று (31.12.2024) மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்படும் சாலைகள், மூடப்படும் மேம்பாலங்கள் ஆகியவற்றின் விவரங்களைச் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதோடு மெரினா, எலியட்ஸ் ஆகிய கடற்கரைக்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த கூடிய இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • “அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற  வேண்டும்” – இ.பி.எஸ். வலியுறுத்தல்!

  • நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாட்டம்!

  • ஆறாத ரணங்களுடன் கடந்த 2024; அமைதியை எதிர்நோக்கும் பாலஸ்தீனம்!

  • மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்!

  • “சேடிஸ்ட் மனநிலையை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன