இலங்கை
விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை; வெளியானது வர்த்தமானி

விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை; வெளியானது வர்த்தமானி
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடைவித்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் வௌியிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.