இலங்கை

வாகன விற்பனையில் இடம்பெற்ற பாரிய மோசடி : மாத்தளையில் ஒருவர் கைது!

Published

on

வாகன விற்பனையில் இடம்பெற்ற பாரிய மோசடி : மாத்தளையில் ஒருவர் கைது!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வலையமைப்பு மோசடி விசாரணைப் பிரிவினர் வாகனங்களைச் சேகரித்து விற்பனை செய்யும் மோசடி ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் பிணைய மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் பணிப்புரையின் பேரில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைகளை அடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் வசம் இருந்த 8 அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அந்த வாகனங்களின் சேசி எண்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

 அவற்றுள் 06 வாகனங்கள் பயன்படுத்தக்கூடியதாகவும் இரண்டு வாகனங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. 

Advertisement

 சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பிலியந்தலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளதுடன், அதன் சேசி இலக்கம் மற்றும் இயந்திரம் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

 இதற்கிடையில்,
அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு நிதி வசதி செய்து கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 05 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.   சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version