இலங்கை
உறக்கத்துக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு!

உறக்கத்துக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த 30வயதுடைய பிரபாகரன் சுவேக்கா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
குறித்த பெண் இன்று காலை 9 மணியளவில் உணவு அருந்திவிட்டு படுத்துறங்கியுள்ளார். பின்னர் குறித்த பெண்ணின் தாயார் மதிய உணவுக்காக அவரை எழுப்பியவேளை அசைவற்று காணப்பட்ட நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.