Connect with us

உலகம்

சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்

Published

on

Loading

சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார்.

Advertisement

 பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 பிரான்சின் ரபெல் போர்விமானங்களும் அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா விமானங்களும் ஐஎஸ் அமைப்பின் இரண்டு இலக்குகள் மீது 7 குண்டுகளை வீசின என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

 2014 – 2015 முதல் சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டுவரும் சர்வதேச கூட்டணியில் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன