Connect with us

இலங்கை

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தை மீள ஒப்படைக்க அவதானம்

Published

on

Loading

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தை மீள ஒப்படைக்க அவதானம்

திருகோணமலையை அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம், இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Advertisement

கடந்த 27ஆம் திகதி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் இந்த ஆளில்லா விமானத்தை மீனவர்கள் குழு கண்டுபிடித்தது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களாக இந்த ஆளில்லா விமானம் கடலில் இருந்ததாகவும், அதனை மீண்டும் தொடர்புடைய நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன