Connect with us

இலங்கை

நாடாளுமன்றம் அமர்வு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Published

on

Loading

நாடாளுமன்றம் அமர்வு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுகான நாடாளுமன்றம் அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற  பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 முதல் 10.30 மணி வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, அரசு தரப்பில், 2024ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனவரி 8 ஆம் திகதிபுதன்கிழமை காலை 9.30 முதல் 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 10மணி முதல்  10.30 மணி நேரம் வாய்வழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி சட்டத்தின் கீழ் விதிமுறைகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் ஆணை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள், கேசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான  ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பின்னர், மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பின் போது கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30முதல் 10.30 வரை வாய்வழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் உத்தரவு, சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு மற்றும் நலன்புரி சலுகைகள் சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தை மாலை 5.30 மணிவரை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Advertisement

ஜனவரி 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு நாளும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கு நேரம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன