இலங்கை
நேபாள பிரதமரை சந்தித்த முன்னள் ஜனாதிபதி!

நேபாள பிரதமரை சந்தித்த முன்னள் ஜனாதிபதி!
நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நேபாள-இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட பயணமாக டிசம்பர் 28 ஆம் திகதி நேபாளம் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.