இலங்கை

உயர்தர மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமர் கோரிக்கை!

Published

on

உயர்தர மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமர் கோரிக்கை!

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

தற்போது பாடசாலைகளின் உயர்தர வகுப்பறைகளில் மாணவர்கள் இருப்பது மிகவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், குறிப்பாக ஆண் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி வெகு தொலைவில் இருப்பதாகவும் எந்தவொரு சமூக அல்லது பொருளாதார காரணங்களின் அடிப்படையிலும் பிள்ளைகள் கல்வியைத் தவறவிடக் கூடாது என்றும், 13 வருடங்கள் பாடசாலை கல்வியுடன் உயர்கல்விக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version