Connect with us

இலங்கை

ஜனவரி 7 இல் இந்த ஆண்டின் கன்னி அமர்வு!

Published

on

Loading

ஜனவரி 7 இல் இந்த ஆண்டின் கன்னி அமர்வு!

நாடாளுமன்றத்தை ஜனவரி 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இதற்கு அமைய ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9.30 முதல் காலை 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து காலை 10.30 முதல் மாலை 5.30 வரை ‘மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024’ தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன