உலகம்
தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய திட்டம்!

தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய திட்டம்!
தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன் சிக் இயோலை கைது செய்வதற்காக 20க்கும் மேற்பட்ட தென் கொரிய பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் குறித்த சூழல் பரபரப்பான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் அவரை கைது செய்வதை தடுக்க முயல்கின்றதாகவும் நீதிமன்றம் அனுமதிவழங்கிய பிடியாணை சட்டபூர்வமற்றது என தெரிவிக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் அதனை சவாலிற்குட்படுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.