Connect with us

இலங்கை

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி ஒருவர் பலி

Published

on

Loading

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி ஒருவர் பலி

முல்லேரியா – அவிசாவளை வீதியில் அம்பதலய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் உடுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

Advertisement

கடுவலையிலிருந்து அங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன