Connect with us

இந்தியா

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்: பீகாரில் பிரசாந்த் கிஷோர் கைது

Published

on

arrest

Loading

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்: பீகாரில் பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று (ஜன.6) அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.பிரசாந்த் கிஷோரின் ஆதரவாளர்களை மேற்கோள் காட்டி போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.காந்தி மைதானத்தில் நடைபெறும் தர்ணா தடைசெய்யப்பட்ட இடத்தில் நடத்தப்படுவதால் இது சட்டவிரோதமானது என மாவட்ட நீதவான் சந்திரசேகர் சிங் கூறினார். மேலும் அவர்,”ஆம், காந்தி மைதானத்தில் தர்ணாவில் அமர்ந்திருந்த பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜன.6 காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று சிங் கூறினார்.மகாத்மா காந்தி சிலைக்கு அருகிலுள்ள தடைசெய்யப்பட்ட இடமான காந்தி மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததாக பிரசாந்த் கிஷோர் மீது பாட்னா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக வெளியான வீடியோவில், போராட்டக் களத்திலிருந்து கிஷோரை போலீசார் கைது செய்வதும் மற்ற போராட்டக்காரர்கள் காவல்துறையைத் தடுக்கும் முயற்சியில் அவரைச் சூழ்ந்ததும் பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்களுக்கு ஆதரவாக ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கிய பிரசாந்த் கிஷோரின் காலவரையற்ற உண்ணாவிரதத்தின் மத்தியில் இந்த கைது நடந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக காந்தி மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிபிஎஸ்சி தேர்வுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?பீகாரில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முன்பு தேர்தல் மூலோபாய நிபுணரான கிஷோர், முறைகேடுகள் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மாநில பொது பணியாளர் தேர்வாணைய தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்து வருகிறார்.பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) நடத்திய 70-வது ஒருங்கிணைந்த (முதல்நிலை) போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். மாநில அரசு மறுதேர்வு அறிவிப்பை அடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்தன, இது முந்தைய தேர்வில் முறைகேடுகளை ஒப்புக்கொள்வதாக பிரசாந்த் கிஷோர் கூறினார்.தேர்வுகளை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் அவர் ஆதரவைக் கோரினார்.பிபிஎஸ்சி தேர்வுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?பீகாரில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முன்பு தேர்தல் மூலோபாய நிபுணரான கிஷோர், முறைகேடுகள் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மாநில பொது பணியாளர் தேர்வாணைய தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்து வருகிறார். பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) நடத்திய 70-வது ஒருங்கிணைந்த (முதல்நிலை) போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.BPSC protest: Bihar Police arrest Prashant Kishor in Patna amid fast unto deathமாநில அரசு மறுதேர்வு அறிவிப்பை அடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்தன, இது முந்தைய தேர்வில் முறைகேடுகளை ஒப்புக்கொள்வதாக பிரசாந்த் கிஷோர் கூறினார். தேர்வுகளை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் அவர் ஆதரவைக் கோரினார்.பிரசாந்த் கிஷோர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்னர் (பிபிஎஸ்சி பிரிலிம்ஸ் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி) பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் பிரிலிம்ஸை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் உத்தரவிடாவிட்டால், ஜனவரி 26 அதிகாரப்பூர்வ விழாவை இந்த மைதானத்தில் நடத்த அரசாங்கத்தை அனுமதிக்க மாட்டோம். பீகாரின் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தது 500 மாணவர்கள் மைதானத்திற்கு வருவதை நாங்கள் உறுதி செய்வோம்”.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன