இந்தியா
நேபாளம், திபெத்தை புரட்டிப் போட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

நேபாளம், திபெத்தை புரட்டிப் போட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
நேபாளத்திற்கு அருகே மேற்கு சீனாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் காயமடைந்தனர்.ஆங்கிலத்தில் படிக்கவும்: At least 53 dead, 62 others injured after earthquakes hit Tibet, say reports from Chinaநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த அதிர்ச்சி அலைகள் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன. குறிப்பாக, டெல்லி, பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது.இதேபோல், திபெத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. மேலும், சீனாவில் நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.இமயமலையில் இந்தியா மற்றும் யூரேசியா தட்டுகள் மோதி எழுச்சியை ஏற்படுத்தும் இடமாக இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. சீனாவின் ஊடகமான சி.சி.டி.வி-வின் படி, நிலநடுக்கத்தைச் சுற்றியுள்ள சராசரி உயரம் 4,200 மீட்டர் (13,800 அடி) ஆகும்.இந்த நிலநடுக்கத்தின் மையம் திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கத்தின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு சில சமூகங்கள் மட்டுமே இருந்ததாக சி.சி.டி.வி ஊடகம் தெரிவித்துள்ளது.இதனிடையே, கடந்த நூற்றாண்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் குறைந்தது 6 ரிக்டர் அளவில் குறைந்தது 10 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “பூகம்பத்தின் டெக்டோனிக் சுருக்கத்தில், ஜனவரி 7, 2025 அன்று, சீனாவின் ஜிசாங்கிற்கு அருகே M7.1 நிலநடுக்கம், யூரேசியா மற்றும் இந்திய தட்டுகளுக்கு இடையே உள்ள எல்லைக்கு வடக்கே ஆழமற்ற ஆழத்தில் சாதாரண பிழையின் விளைவாக ஏற்பட்டது. தோராயமாக வடக்கு-தெற்கு வேலைநிறுத்தம் செய்யும் பிழையில் சிதைவு ஏற்பட்டது, கிழக்கே அல்லது மேற்காக மிதமாக நகர்கிறது என்பதைக் குறிக்கிறது.” என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.