Connect with us

உலகம்

ஷேக் ஹசீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; வங்கதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

Loading

ஷேக் ஹசீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; வங்கதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 07/01/2025 | Edited on 07/01/2025

வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வங்கதேச அரசு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது அதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கைது உத்தரவிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடந்த போது ஏராளாமானோர் மர்மமான முறையில் காணாமல் போனதாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை வங்கதேச நீதிமன்றம், வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனா, முன்னாள் காவல்துறை தலைவர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்ய வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • திருச்சி மத்திய மண்டல ஜ.ஜியாக பொறுப்பேற்று கொண்டார் ஜோஷி நிர்மல் குமார்!

  • குடிநீர் ஏரியில் குப்பை கிடங்கு; மக்களின் அடிமடியில் கைவைக்கும் ஊராட்சி நிர்வாகம்!

  • இன்றைய ராசிபலன் – 07.01.2025

  • நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

  • தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன