இலங்கை
கிளிநொச்சியில் ஆலய குருக்கள் மீது கொடூர தாக்குதல்; காரணம் என்ன!

கிளிநொச்சியில் ஆலய குருக்கள் மீது கொடூர தாக்குதல்; காரணம் என்ன!
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) பகல் 11 மணியளவில் மீளாய்வு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த
சமயம் மீளாய்வு செய்வதற்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதோடு குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன.
எனினும் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகவில்லை.