இலங்கை
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!
வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கரோலினா தோட்டத்தில் நேற்றையதினம் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 29 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட வட்டவளை மற்றும் கலஹா பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.[ஒ]