Connect with us

இலங்கை

வாய்த்தர்க்கத்தில் நண்பரின் பாதத்தை வெட்டித் துண்டாடிய நபர்

Published

on

Loading

வாய்த்தர்க்கத்தில் நண்பரின் பாதத்தை வெட்டித் துண்டாடிய நபர்

 பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து தனது நண்பரின் பாதத்தை வெட்டி துண்டாடியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

பாதிக்கப்பட்ட நபரும் சந்தேக நபரும் பின்வத்த புகையிரதப் பாதைக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் அவர் காலிலும் தோளிலும் மன்னா கத்தியால் தாக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மன்னா கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன