Connect with us

இந்தியா

ஸ்டாலின் சொன்ன பதில் ‘சார்’… அதிமுகவினரின் ரியாக்‌ஷன்! என்ன நடந்தது சட்டமன்றத்தில்?

Published

on

Loading

ஸ்டாலின் சொன்ன பதில் ‘சார்’… அதிமுகவினரின் ரியாக்‌ஷன்! என்ன நடந்தது சட்டமன்றத்தில்?

சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில் அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை பற்றி விவரித்தார்.

அப்போது எந்த சார் ஆட்சியில் இருந்தார் என கேள்வி எழுப்பினார். ‘அதுகுறித்து 100 சார் கேள்விகளை என்னால் எழுப்ப முடியும்’ என்றும் முதல்வர் குறிப்பிட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

அதன் பின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

“தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலையிலேயே இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவரின் பெயர் ஞானசேகரன், இவர் திமுகவைச் சேர்ந்தவர், அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவில் இவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.

பாதிக்கப்பட்ட பெண் தன் புகாரில் குறிப்பிட்ட அந்த சார் யார் என்று கேள்வி கேட்கிறபோது, காவல் துறை ஆணையர் குற்றவாளி ஒருவர்தான் என்று எப்படி முடிவுக்கு வந்தார்? ஆரம்பகட்ட விசாரணையிலேயே போன் ஃப்ளைட் மோடில் இருந்தது என்று அவர் சொன்னது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

Advertisement

டிசம்பர் 27 ஆம் தேதியில் இருந்து அமைச்சர்கள் மாறி மாறி கருத்துகளை வெளிப்படுத்தியதால் சந்தேகம் மேலும் அதிகரித்தது. புகார் கொடுத்த மாணவியின் பெயர், உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர். எப்படி வெளியானது? முதலமைச்சர் டெக்னிகன்ல் எரர், ஒன்றிய அரசின் நிறுவனம்தான் காரணம் என்று சொல்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுதும் ஆர்பாட்டங்கள் நடத்தினோம். எங்களுக்கு அனுமதி கொடுக்காமல் கைது செய்தார்கள். ஆனால் நேற்று ஆளுநரை கண்டித்து திமுக ஒரே நாளில் அறிவித்து ஆர்பாட்டம் நடத்தியது. இதுபற்றி கேட்டால் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் கூறுகிறார். முதல்வர் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்.

முதல்வரிடத்தில் முறையிட்டால் நீதி கிடைக்கும் என்றுதான் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பொள்ளாச்சி விவகாரம் சம்பந்தமாக பேசி தவறான தகவல்களைக் கூறி, அண்ணா பல்கலை விவகாரத்தை நியாயப்படுத்துகிறார்” என்று தெரிவித்தார்.

Advertisement

‘-

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன