Connect with us

இலங்கை

3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

Published

on

Loading

3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

  இந்தியா – கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

அவர் நேற்று முன் தினம்(6) காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தமது ஒரே மகளை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்த அதேசமயம் 8 வயதே ஆன‌ மாணவி தேஜஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன