Connect with us

இலங்கை

இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

Published

on

Loading

இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

நாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறையை கருத்திற்கொண்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இன்றும், எதிர்வரும் 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெப்ரவரி மாதம் 02 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் இரவு 7.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளில் இரவு 7.40க்கு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன