இந்தியா
சட்டமன்ற தேர்தல் தொடர்பில் பிரேமலதா வெளியிட்ட கருத்து!

சட்டமன்ற தேர்தல் தொடர்பில் பிரேமலதா வெளியிட்ட கருத்து!
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் பிறந்து வளர்ந்த ஊரான ராமானுஜபுரத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக சென்றால் நாட்டுக்கு நல்லது என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.