Connect with us

இலங்கை

தொலைபேசியில் அச்சுறுத்தல்; நீதிமன்றம் சென்ற பிள்ளையான்

Published

on

Loading

தொலைபேசியில் அச்சுறுத்தல்; நீதிமன்றம் சென்ற பிள்ளையான்

  முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பிள்ளையான் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த வேளையில் ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின்போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி ஆணையாளர் வழக்கு தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன