Connect with us

இலங்கை

ரஷ்ய சுற்றுலா பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

Published

on

Loading

ரஷ்ய சுற்றுலா பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் ஓ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Advertisement

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவ தினமான இன்று (10) காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல்மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்ததை அவதானித்த  அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயல்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சடலம் வாழைச்சேனை ஆதார மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன